9 ஆகஸ்ட், 2010

இலங்கையர் உட்பட 76 அகதிகள் மெக்ஸிக்கோவில் பொலிஸாரால் கைது

இலங்கையிலும் மத்திய அமெரிக்காவிலுமிருந்து சென்ற 76 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மெக்ஸிக்கோவின் தென்கிழக்கு மாநிலமான சியபாஸில் கைவிடப்பட்டிருந்த இழுவைப் பெட்டி ஒன்றுக்குள்ளிருந்து உடல்வரட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டுப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அநாமதேய அறிவித்தல் ஒன்றை அடுத்து பொலிஸார் சென்றபோது, சியாபாஸ் நெடுஞ்சாலையில் காணப்பட்ட 3 மீற்றர் அகலமும் 8 மீற்றர் நீளமுமான இழுவைப்பெட்டிக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 76 பேரும் நீராகாரமின்றி முடங்கி கிடந்ததால் உடல்வரட்சி உற்றதற்கான அறிகுறிகளுடன் காணப்பட்டதாக மத்திய சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டரீதியாக அந்தநாட்டில் இருந்ததற்கான ஆதாரம் எதையும் வைத்திருக்காத அந்த குடியேற்றவாசிகள் தாங்கள் கௌத்தமாலா, எல்சல்வடோர், ஹொண்டூறாஸ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையையோ அவர்களில் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கையையோ அல்லது அவர்களில் சிறுவர்களும் காணப்பட்டார்களா என்ற விபரங்கள் எதுவும் வெளியியடப்படவில்லை.

மெக்ஸிகோவின் தேசிய குடியேற்றவாத அலுவலகத்திற்கு அனுப்பப்பட்“ட இவர்கள் அநேகமாக அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆவணங்கள் எதுவுமின்றி இவர்கள் அவ்வளவுதூரம் வருவதற்கு யார் காரணம் என்று அறிவத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக