8 ஆகஸ்ட், 2010

யாழ். வேலையற்ற பட்டதாரிகளின் கூட்டம் பாதுகாப்புத் தரப்பினரால் தடுக்கப்பட்டது



யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று பகல் 10.00 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் எற்பாடு செய்து இருந்த கூட்டம் பொலிஸ் இராணுவத்தினரின் தலையீட்டின் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் வேலையற்று இருக்கும் பட்டதாரிகள் இன்ற காலையில் ஒன்ற கூடி தமது கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படடு இருந்தது இந் நிலையில் இன்று காலை முதல் நல்லூர் ஆலய சுற்றாடல் மற்றும் கோவில் வீதி இராசாவின்தோட்ட வீதி பருத்தித்துறை விதி சிவன் வீதி அத்தியடி கோவில் வீதி உட்பட அந்த சுற்றாடலில் உள்ள அனைத்’து வீதிகளிலும் பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.

இளம் வயதினர் வீதியில் மறிக்கப்பட்டு படையினராலும் பொலிசாராலும் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் படி கூறி திருப்பி விடப்பட்டார்கள்.

இதே வேளை காலையில் நல்லார் ஆரயத்திற்க்கு வந்து கூடிய ஒரு தொகுதி வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் படையினரும் பொலிசாரும் விடுத்த வேண்டுதலைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

ஆனாலும் கூட கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் இக் கூட்டத்தை நடத்தும் முகமாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணம் கட்ட முன் கூட்டியே அனுமதி பெற்று இருந்த போதிலும் குறிப்பிட்ட மண்டபம் பகல் 11.00 மணிவரையிலும் திறக்கப்படாத நிலையில் இக் கூட்டத்தை ஒழுங்கமைப்புச் செய்த ஒருங்கினைந்த தோழில் வாயப்பற்ற பட்டதாரிகள் சங்கம் கூட்டத்தை நல்லூர் நாவலர் கலாசார வளாகத்தில் நடத்தி முடித்தார்கள். நாவலர் கலாசார மண்டபத்தின் வெளியாலும் நூற்றுக் கணக்கான பொலிசாரும் மற்றும் இராணுவத்தினருடன் கலகம் அடக்கும் பொலிசாரும் வாகணங்களில் காணப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக