8 ஆகஸ்ட், 2010

தற்கொலை செய்து கொண்ட யுவதியின் உடல் இரு முறை பிரேத பரிசோதனை

தற்கொலை செய்துகொண்ட ஒரு யுவதியின் பூத உடலை இரு முறை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சம்பவம் கட்டுகஸ்தோட்டையில் இடம் பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியொருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக பிரேத பதிசோதனையை கட்டுகஸ்தோட்டை மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி எஸ்.பாஸ்கரநாதன் நடாத்தி சாட்சியம் அளித்தார்.

இதன் பிரகாரம் அக்குறணை திடீர் மரண விசாரனை அதிகாரி பீ.ஏ.ஸீ.எம். றமீம் இது ஒரு தற்கொலையென தீர்ப்பளித்தார்.

உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் இம்மரணம் ஒரு கொலையாக இருக்கலாமென சந்தேகித்து கட்டுகஸ்தோட்டைப் பொலிஸில் மீண்டுமொரு புகார் கொடுத்ததை அடுத்து அதனை விசாரித்த கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கநாயக்க மீண்டும் பிரேத பரிசோதனையொன்றை நடாத்துமாரு உத்தரவிட்டார்.

அதன்படி கண்டி போதனா வைத்திய சாலையின் சட்டமருத்துவ அதிகாரி ஏ.பீ. செனவிரத்ன இரண்டாவது பிரேத பரிசோதணையை நடாத்திய சாட்சியமளிக்ககையில் இது ஒரு தற்பொலையென்றே தெரிவித்தார்.

டாக்டர் எஸ்.பாஸ்கரனாதன் கருத்து இங்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டு அதே தீர்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக