8 ஆகஸ்ட், 2010

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது “ஷீ” வீச்சு; கட்சி தொண்டர் ஆத்திரம்





பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார். இதற்கிடையே அங்கு தங்கியிருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் பிர்மிங்காம் நகரில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சர்தாரி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று இருந்தனர்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர் அதிபர் சர்தாரி மீது தனது 2 “ஷீ”க்களை வீசினார். ஆனால், அவை அவர் பேசிய மேடையை சென்றடைய வில்லை.

இதனால் கூட்டத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந் தவர்கள் “ஷீ” வீசிய நபரை மடக்கி பிடித்து “தர்ம அடி” கொடுத்தனர்.

“ஷீ” வீசியது ஏன் என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு தீவிர வாதத்தை இறக்குமதி செய்கிறது என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து இருந்தார். இருந்தும், இங்கிலாந்து வந்து அவரை சந்தித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இது போன்று செய்வதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, அதிபர் சர்தாரியின் இங்கிலாந்து பயணத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் குறித்து டேவிட் கேமரூன் விமர்சித்த பிறகும் இங்கிலாந்து சென்றது ஏன்? என கேட்கின்றனர்.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவரது எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக