8 ஆகஸ்ட், 2010

மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா


வரலாற்றுப் புகழ் மிக்க மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று பகல் இடம் பெற்றது காலையில் இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி 10.40 மணியளவில் சுவாமி வெளி விதி வந்து தேரில் ஏறி வீதி உலா வரும் பவனி இடம் பெற்றது .

கடந்த பல வருடங்களாக ஆலயத்தில் திருப்பணி நடை பெறுவதினால் தற்போது நடைபெறும் உற்சவத்தை ஒட்டி சுவாமி ஒரு தேரில் மட்டும் விதி உலா வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நிகழ்வில் சுமார் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டார்கள் .பொது மக்களின் போக்கவரத்து ந3ன்மை கருதி காலை முதல் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்தும் மற்றும் இடங்களில் இருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் மாவிட்டபுரம் ஆலயம் வரை சேவையில் ஈடுபட்டதுடன் தனியார் மினி பஸ் சேவைகளும் இடம் பெற்றன.

ஆலயத்தில் அடியவாகள் தமது நேர்திக்கடன்களை நிறைவேற்றும் வகையில் கற்பூரச் சட்டி அங்கப்பிரதட்சை அடியடித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள் வீதிக்கு வீதி மாவைக் கந்தனுக்கு தேங்காய்கள் உடைத்தும் வழிபாடுகளை நிறைவேற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக