8 ஆகஸ்ட், 2010

பாதையோரம் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்

கட்டுகஸ்தோட்டையில் பாதையோரத்தில் குப்பைகளை கொட்டிய நான்கு பேருக்கு கண்டி பிரதான நீதவான் 2000 ரூபாய் அபராதம் விதித்தார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பேர் பாதை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டியதால் கைதுசெய்யப் பட்டு கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.

முறைப்பாட்டை விசாரித்த கண்டி நீதவான் லலித் ஏக்கநாயகா பாதை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டிய குற்றத்திற்காக நான்கு பேருக்கும் அபராதம் விதித்து தீர்பளித்தார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தலைமையிலான பொலிஸ் குழு முறைப் பாட்டை நெறிப் படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக