15 ஆகஸ்ட், 2010

இலங்கை புகையிரத சேவைக்கு விரைவில் செய்மதி தொழில்நுட்பம்

இலங்கை புகையிரத சேவைக்கு செய்மதி தொழில்நுட்பத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து புகையிரத சேவையின் வணிகப்பிரிவு அதிகாரி விஜய சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தகவல் தொலைத்தொடர்பாடல் நிறுவனமும் புகையிரத திணைக்களமும் இத்திட்டத்திற்கு இணக்கம் கண்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் புகையிரத நிறைவேற்று முகாமையாளர் பி.பி.விஜேசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே மேற்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முதலில் 8 வாரத்திற்குட்பட்;ட காலப்பகுதியில் 5 புகையிரதங்களைக் கொண்டு பரீட்சார்த்த ரீதியில் செய்யவுள்ளோம். அதன்பின்னர் இத்திட்டம் வெற்றியளிக்குமாயின் 80 புகையிரதங்களுக்கு இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக