15 ஆகஸ்ட், 2010

சக்வித்தி: போலி உறுதிகளுடன் காணிகள் விற்பனை செய்திருப்பது அம்பலம் பாதிக்கப்பட்டோர் அழையுங்கள்: 011-2422176




பாதிக்கப்பட்டோர்

அழையுங்கள்:

011-2422176

நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க போலி உறுதிகள் தயாரித்து காணிகளை விற்பனை செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து காணிகளை வாங்கியவர்கள் போலி காணி உறுதியால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். சந்தேக நபரான சக்வித்தி ரணசிங்கவிடமிருந்து காணிகளை வாங்கியவர்கள் இருப்பின், குற்றப் புலனாய்வுப் பிரிவின் 011-2422176 என்ற இலக்கத்துக்கு உடனடியாக தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் சக்வித்தி ரணசிங்கவிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதற்கான காசோலையை பெற்று வங்கியில் பணமாக்க முடியாது போனவர்கள், அல்லது சக்வித்தி ரணசிங்கவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இன்னமும் இருப்பின், மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட பின்னர் நேரடியாக வருகை தந்து முறைப்பாடுகளை தெரிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக