11 ஆகஸ்ட், 2010

தாண்டும் பிரச்சினைகளைச் சமரசமாக தீர்ப்பது ஆகியவை குறித்து இருதரப்பு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவர்.

இந்திய - இலங்கை மீனவர்கள் இடையில் சமரச பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்செய்தியில் மேலும்,

"இலங்கை மீனவ பிரதிநிதிகள் கொண்ட இந்தக் குழுவினர், எதிர்வரும் 16ஆம் திகதி ராமேஸ்வரம் வந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதே வேளை, எதிர்வரும் 17, 18ஆம் திகதிகளில் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கடலூர் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.

பேச்சுவார்த்தையின் போது இந்திய, இலங்கை மீனவர்கள் மோதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, கடலில் எல்லை

19, 20 ஆம் திகதிகளில் இலங்கை மீனவ பிரதிநிதிகள் சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். இதன் மூலம் தமிழக, இலங்கை மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக