11 ஆகஸ்ட், 2010

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி
ஜனாதிபதி கலந்து கொள்ளும் நீர் நிரப்பு நிகழ்வில் பங்குபற்ற மக்களுக்கு வாய்ப்பு
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர் மாணப் பணிகளை பார்வையிட வருவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததாக துறை முக அதிகார சபை கூறியது.

துறைமுக நிர்மாண பணிகளைப் பொதுமக்கள் பார்வையிட இன்று (11ம் திகதி) வரை அனுமதிப் பதென ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருந்தது.

இருப்பினும் மக்கள் வருகை யைக் கட்டுப்படுத்த முடியாதிருப் பதாலும், ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி பிரதான வைபவம் நடத்துவதற்கான ஏற்பாடு களை மேற்கொள்வதற்காகவும் பார்வை யிடுவதற்கான கால எல்லை நேற்று டன் முடிவு செய்யப்பட்டதாகவும் அதிகார சபை கூறியது.

துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மக்களுக்கு நீர் நிரப்பும் வரலாற்று முக்கியமான நிகழ்வை பார்வையிட முழு அனு மதி அளிக்கப்பட உள்ளது. மக்க ளுக்கு நீரில் இறங்கி குதூகலிக்கவும் அவகாசம் வழங்க உள்ளதாக அதி கார சபை கூறியது.

சுமார் இரண்டு இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் துறைமுகத்திற்கு வர மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

துறைமுகம் அமைப்பதற்காக 17 மீற்றர் ஆழத்திற்கு தோண்டப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக