11 ஆகஸ்ட், 2010

ஜனாதிபதி - எதிர்க்கட்சி தலைவர் நேற்று மீண்டும் சந்திப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக் கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுக்காலை ஜனாதிபதி மாளிகையில் நடை பெற்றது.

உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர் பில் இதன்போது கலந்துரையா டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செய லக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு திருத்தம் தொடர் பாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையி லான கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. அதன் ஒரு அம்சமாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றதாக மேற்படி செயல கம் தெரிவித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக