11 ஆகஸ்ட், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு இன்று

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது.

சர்வதேச தொடர்புகளுக்கான கதிர்காமர் கற்கை நிலைய கட்டிடத்தில் அமர்வு நடைபெறுகிறது.இந்த ஆணைக்குழுவில் பொதுமக்களுக்கான அமர்வுகளும் இடம்பெறவுள்ளன. இன்று முதல் 25ஆந் திகதி வரை இந்த அமர்வுகள் இடம்பெறுகின்றன.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0112673408 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்வைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக