11 ஜூலை, 2010

ஐ நா கட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்- வெளிவிவகார அமைச்சு தகவல்

ஐக்கிய நாடுகள் கட்டமைப்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படப் போவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளி விவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தெளிவான உறுதியை வழங்கியுள்ளதாக அமைச்சின் அதிகாரி யொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த காரியாலயத்தின் அன்றாட நட வடிக் கைகளுக்கு இடையூறுகள் ஏற்படு வதாகவும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அர சாங்கம் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதாக வும் ஐக்கிய நாடுகள் சபை சுமத்தியிருந்த குற் றச்சாட்டுக்கு பதிலளிக்கும் முகமாகவே வெளி விவகார அமைச்சு இந்த கருத்துக்களை வெளி யிட்டுள்ளது. அதேவேளை, அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் உரிமை ஜனநாயக முறைமையின் ஒரு அடிப்படை அங்கம் என வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பிராந்திய காரியாலயத்தை மூடுவதற்கு செயலாளர் நாயகம் எடுத்துள்ள தீர்மானம் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் வகையில் அமை வதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த காரியாலயம் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த 34 நாடுகளுக்கு சேவையாற்றும் ஒன்றாக அமைந்துள்ளது. எவ் வாறாயினும் இந்த காரியாலயத்தை மூடுவதற் கான தீர்மானம் கடந்த வருடமே மேற்கொள் ளப்பட்ட விடயம் என ஐக்கிய நாடுகளின் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தற் போது நிலவும் சூழ்நிலைக்கு ஏதுவானதாக அமைந்தது என இலங்கையின் வெளியு றவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள கருத் தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் ஐக்கிய நாடுகளின் கொழும்பு காரியாலயத் திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வேறு சில நாடுகள் அறிக்கை விடுத்துள்ளன. இந்த போராட்டங்கள் காரணமாக ஐக்கிய நாடுகளின் காரியாலயம் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக, ஐக்கிய அமெ ரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக