11 ஜூலை, 2010

மட்டக்களப்பில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து அகதிமுகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் 93 குடும்பங்கள் அகதிகளாக உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 37 குடும்பங்களைச்சேர்ந்த 212 பேரும் செங்கலடி பிரிவைச்சேர்ந்த 53 குடும்பங்களைச்சேர்ந்த 221 பேரும் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 36123குடும்பங்களைச்சேர்ந்த 123907பேர் மீளக்குடியமர்த்தப்படடுளள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக