11 ஜூலை, 2010

நைஜீரியா: பையில் 70 குழந்தைகளின் சடலங்கள் வைத்திருந்தவர் கைது

70 குழந்தைகளின் சடலங்களை பையில் வைத்திருந்த மனிதனை நைஜீரியாவின் வர்த்தக தலைநகரமான லாகோசில் போலீஸக்ஷ்ர் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையின் சவகிடங்கில் போதிய இடமில்லாததால் சடலங்களை வேறொரு இடுகாட்டில் புதைப்பதற்கு எடுத்துச் சென்றதாக கைதானவர் கூறினார். போலீஸக்ஷ்ர் இதனை விசாரித்து வருகின்றனர்.

லாகோசின் மருத்துவமனையின் சவகிடங்குகள் சிறிய இடமாக உள்ளதால், அதிலிருந்து வரும் துர்நாற்றம் மக்களை பெரிதும் துன்புறுத்தியது நீண்ட கால பிரச்னையாகவே இருந்து வந்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனை அதிகாரிகள் சிலரை போலீஸக்ஷ்ர் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக