7 ஜூலை, 2010

இலங்கை அகதிகளுக்கான ஆஸியின் இடைக்காலத் தடை நீக்கம்!

இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் குடிவரவிற்காக விண்ணப்பிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதற்கான அறிவித்தலை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லர்ட் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கை அகதிகள் விடயத்தில் நியுசிலாந்து மற்றும் கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுடன் பிராந்திய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி இந்த இரு நாடுகளிலும் இலங்கை அகதிகளைத் தங்க வைப்பதற்கான மத்திய நிலையங்கள் நிறுவப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகளைக் கையாள்வது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக