2 ஜூலை, 2010

ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்டருக்கு 7 ஆண்டு சிறை





ஆஸ்திரேலியாவில் மூன்று நோயாளிகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, இந்திய வம்சாவளி டாக்டர் ஜெயந்த் படேலுக்கு (60) 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.÷

கடந்த 2003- 2005-ம் ஆண்டுகளில் பன்டாபெர்க்ஸில் உள்ள மருத்துவமனையில் ஜெயந்த் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு அவர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். அறுவைச் சிகிச்சைக்கு பின் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

ஜெயந்த்தின் அறுவை சிகிச்சைக் காரணமாக அவர்கள் மூவரும் உயிரிழந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த குயின்ஸ்லாந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் பைரன், ஜெயந்த்தின் சிகிச்சை காரணமாக அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த குற்றத்திற்காக ஜெயந்த்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டைனை விதிக்கப்படுகிறது என வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

நோயாளிகளை உடல் ரீதியாக வருந்தச் செய்த குற்றத்திற்காக மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக