2 ஜூலை, 2010

ததேகூ உயர்மட்டக் குழு 4ஆந் திகதி இந்தியா விஜயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு ஒன்று எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எமது வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மேற்படிக் குழுவினர் 5, 6, 7 ஆகிய திகதிகளில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் உட்பட உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்து உரையாடவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் இன்றைய நிலை மற்றும் இறுதித் தீர்வு உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழுவில் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக