17 ஜூன், 2010

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்கான நிதி அவர்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் என்ற இந்திய அரசாங்கத்தின் கூற்றை இலங்கை மறுத்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நிதி மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

"இந்தியா இலங்கைக்குப் பல வழிகளிலும் உதவி வருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை அமைச்சர் சிதம்பரம் முன்வைத்தார். அதன்போதே, வீடமைப்பதற்கான நிதி மக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிதி நேரடியாக வழங்கப்படும் எனக் கூற முடியாது. நாட்டின் இறைமையை அது பாதிப்பதால் அரசாங்கத்தினூடாகவே நிதி வழங்கப்பட வேண்டும்" என கெஹெலிய மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக