17 ஜூன், 2010

நெடுங்கேணி, நொச்சிமோட்டை பகுதிகளில் பிரதேச செயலகங்கள்


அமைச்சர்கள் பசில், ஜோன் ஆகியோரினால் நாளை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு


வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி மற்றும் நொச்சிமோட்டை பகுதிகளில் 19 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள் நாளை 18ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளனர். நெடுங்கேணி பிரதேச செயலகம் 9 இலட்சம் ரூபா செலவிலும், நொச்சி மோட்டை ‘சேவா பியச’ நிலையம் 10 இலட்சம் ரூபா செலவிலும் நிர்மாணி க்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பொது நிர்வாக அமைச்சு வழங்கியுள்ளது.

அத்துடன் வவுனியாவில் சமுர்த்தி சங்க காரியாலயமொன்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக