9 ஜூன், 2010

வடபகுதி மக்களும் கெளரவமாக வாழ நடவடிக்கை பசில் ராயபஹ்சா



தமிழ்க்கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்பாடு
வட பகுதி மக்களும் கெளரவமான இலங்கையர்களாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி அவர்களின் ஆதரவுடன் வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெ ன்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்த போதிலும், சில அழுத்தங்கள், தலையீடுகள் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக மீளக் குடியமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இல்லாவிட்டால் அந்த மக்களுக்கு சிறந்த வாழ்வாதார ஆதரவினை வழங்கியிருக்க முடியுமெனத் தெரிவித்தார்.

பெரும்போக அறுவடையைச் செய்யக்கூடியவாறு மக்களை மீளக்குடியமர்த்தவிருந்ததாகவும், ஆனால், தற்போது அவர்கள் இடைப்போகத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் மீளக் குடியேறியுள்ள பிரதேசங்களுக்குச் சென்று நேரில் அவதானித்த விடயங்கள் குறித்து இரா. சம்பந்தன் எம். பி. நேற்று (09) சபையில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வட பகுதிக்குச் சென்றுவரக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்று குறிப்பிட்ட அமைச்சர் பசில், கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதும் ஐ. நா. வின் சான்றிதழைப் பெற்றே மக்களை மீளக் குடியமர்த்துவதாகவும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறினார்.

வடக்கில் ஒரேயொரு பிரதேச செயலகப் பிரிவைத் தவிர ஏனையவற்றில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதை, மின்சாரம், குடிநீர், நீர்ப்பாசனம், கூட்டுறவு சங்கக் கடை, வைத்தியசாலை உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன.

மீன்பிடித்துறை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்ற துறைகளில் தொழில்களைத் தொடங்க ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டதும் நன்னீர் மீன்வளர்ப்பு ஆரம்பிக்கப்படும்.

மீனவர்களுக்கு வலை, படகு என்பவை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வடக்கில் உள்ள 160,00. வீடுகளையும் புதிதாக நிர்மாணித்துக் கொடுப்பது அரசால் சாத்தியமில்லையென்றும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கரங்கொடுத்தால், அவர்கள் சொந்தக் காலில் சுயமாக எழுந்துநிற்க முடியுமென்று நம்புவதாகவும் சுட்டிக்காட்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக