9 ஜூன், 2010

டெல்லியில் இன்று மன்மோகன்சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு; ஒப்பந்தங்களில் கையெழுத்து

இலங்கை அடெல்லியில் இன்று    மன்மோகன்சிங்குடன்    ராஜபக்சே சந்திப்பு;    ஒப்பந்தங்களில் கையெழுத்துதிபர் ராஜபக்சே 2-வது முறையாக அதிபர் பதவியை ஏற்ற பிறகு முதன் முறையாக இந்தியா வந்துள்ளார்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த அவர் நேற்று இரவு டெல்லி வந்தார்.

இன்று அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அவரை வரவேற்றனர். ராணுவ அணி வகுப்பு மரியாதையும் நடந்தது. அதை ஏற்றுக்கொண்டார்.
அதை தொடர்ந்து மன்மோகன்சிங் - ராஜபக்சே சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி மாளிகையிலேயே நடந்த இந்த நிகழ்ச்சியில் பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இன்று மாலை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சேயை சந்தித்து இலங்கை தமிழர்கள் நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மவுரியா ஓட்டலில் இந்த சந்திப்பு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக