1 ஜூன், 2010

எம் மீதான குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியமில்லை : கெஹெலிய


இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு இறைமையுள்ள நாடு. அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை அதற்கு இருக்கின்றது.

நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சாதகமான கருத்துக்களை வேறு நாடுகளும் தெரிவித்துள்ளன.

தவறுகளை நாங்களாகவே திருத்திக் கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக