1 ஜூன், 2010

ஜீஎஸ்பி தொடர்பில் சாதகமான முடிவு கிட்டும் : அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

இது தொடர்பில் நாட்டுக்கு சாதகமான முடிவு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடு திரும்பினார். அங்கு உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்ததுடன் இலங்கையின் நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக