13 மே, 2010

அராலியில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் அராலிப் பகுதி வண்ணார்குளத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் அராலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக