13 மே, 2010

2011 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூலையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டிற்காக நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜுலை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை அதனால் மூன்று மாத அரசாங்க செலவீனங்களுக்கான தொகையை ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்துகொண்டார்.

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான முதலாவது வாசிப்பு ஜுலை மாதம் இறுதியில் நிறைவுபெறும் என்பதுடன் முழுமையான வரவுசெலவுத்திட்டம் வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக