13 மே, 2010

விக்டோரியா மாநில அரசின் பல்லினக் கலாசாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க

விக்டோரியா மாநிலஅரசினால் இந்த ஆண்டின் (2010)ஆரம்பத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான டிப்ளோமா புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குமுகமாக முதல் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான வகுப்புகள் மெல்பேர்ண் தஙஐப பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது நடைபெறுகின்றன.

வகுப்பில் கற்றுக் கொண்டிருப்போரை வாழ்த்தும் வைபவம் ஒன்றை அண்மையில் விக்டோரியா மாநில அரசு ஒழுங்கு செய்திருந்தது. விக்டோரியா பாராளுமன்றத்தின் ராணி மண்டபத்தில்(ணசீடீடீடூஙூ ஏஹங்ங்) இவ்வைபவம் நடைபெற்றது.

பல்லினக் கலாசார அமைச்சர் ஜேம்ஸ் மேர்ளினோ, மாணவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கினார்.

பல்லினக் கலாசார சபைத் தலைவர் ஜோர்ஜ் லிகாகிஸ், விக்டோரியா பல்லினக் கலாசார சபை ஆலோசனைக்குழு உறுப்பினர் என்.ஆர். விக்கிரமசிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குடிவரவுத்திணைக்கள மாநில நிர்வாகத்தினர், தஙஐப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக