13 மே, 2010

இந்தியாவிலிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்து கொள்வனவு

இந்தியாவிலிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படையினருக்குச் சொந்தமான இ130 ரக விமானத்தினூடாக மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரத்மலானைக்கு இன்று மாலை 4.55 இற்கு முதல் கட்ட மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 18 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய மருந்துப்பொருட்கள் முதல்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 3 தடவைகள் இந்தியாவிலிருந்து மருந்துகள் கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை விமானப் படையின் குரூப் கப்டன் ஜனக நாணயக்கார வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக அத்தியாவசிய மருந்துப்பொருட்களில் பாரியளவு தட்டுப்பாடு நிலவியது. இதனைக் கருத்திற்கொண்டு அவசரமாக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக