1 மே, 2010

வடக்கில் மக்கள் மேம்பாடு; மீள் குடியேற்றம்; பாதுகாப்பு செயலர் நேரில் ஆராய்வு துரித செயற்பாடுகளுக்கு அறிவுறுத்தல்





யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ யாழ். குடா நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

29ம், 30ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அவர், யாழ். குடாநாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் ஆனையிறவு பகுதிக்கும் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் மதிப்பீடு செய்தார்.

பலாலி விமானத் தளத்தை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு விசேட மரியாதை

அணி வகுப்பு நடத்தப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் யாழ். குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள், யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள், மீள் குடியேற்றம், கண்ணிவெடி அகற்றும் பணிகள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் முன்னேற்றம், இராணுவம் மற்றும் சிவில் மக்களுக்கு இடையிலான உறவு களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கமளித்தார்.

சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட அவர், மக்கள் நலன் கருதிய பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

வட மாகாண கடற்படைத் தலைமை யகத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை வட மாகாண கடற்படைத் தளபதிரியர் அட்மிரல் எஸ். எம். பி. வீரசேகர வரவேற்றதுடன் கடற்பரப்பில் முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

புலிகளின் செயற்பாடுகளால் எந்தவித செயற்பாடும் இல்லாமல் இருந்த காங் கேசன்துறை துறைமுகத்தின் இறங்குதுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.

இந்த இறங்குதுறை மீண்டும் ஆரம்பிக் கப்பட்டதன் மூலம் இதுவரை திருகோண மலையில் செய்து வந்த கப்பல் திருத்தப் பணிகளை காங்கேசன்துறையிலேயே மேற்கொள்ள முடியும் என்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

யாழ். கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவர்களின் சுக நலன்களையும் விசாரித்தார்.

இதே வேளை, நயினாதீவு நாகதீப விகாரைக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் மத வழிபாடுகளிலும் ஈடு பட்டார்.

வன்னி மனிதாபிமான நடவடிக் கையின் போது 2009 ஜனவரி மாதம் 10ம் திகதி ஆனையிறவு படையினரால் கைப் பற்றப்பட்டு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சுதந்திர நடமாட்டத்திற்கு வழிவகுத்ததை நினைவு கூரும் முகமாக ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய நினைவு தூபியை பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்தார். இலங்கையை அனைவரும் தாங்கி நிற்பது போன்றும் வட பகுதியில் மலர் மலர்ந்தது போன்றும் சித்தரிக்கும் வகையில் நினைவு தூபி அமைக் கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு ஆனையிறவு பிரதேசம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக