16 மே, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி விஜயம்



தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே வன்னிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இக் குழுவினர் வன்னியில் தங்கியிருப்பர் எனவும் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ள பிரதேசங்களை சென்று பார்வையிட உள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக