14 ஏப்ரல், 2010

அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நிறைவு: மாநாட்டின் நிறைவில் கூட்டறிக்கை


வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் அணு சக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு செவ்வாய்ககிழமை நிறைவடைந்தது. மாநாட்டின் நிறைவில் பங்கேற்ற நாடுகள் அனைத்தும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

42 நாடுகள் பங்கேற்ற அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடைபெற்றது. செவ்வாய்ககிழமை மாநாட்டின் நிறைவில், கூட்டறிக்கையும் 2010-ம் ஆண்டுக்கான செயல்திட்டமும் வெளியிடப்பட்டன.

கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: "அணுசக்தி பொருள்களுக்கு அனைத்து நாடுகளும் உரிய பாதுகாப்பு அளிப்பது, அனைத்து நாடுகளும் அணுசக்தி பாதுகாப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, தேவைப்பட்டால் பிற நாடுகளுக்கு உதவுவது, அணுசக்தி தீவிரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது,

அணுசக்தியை ஆக்கப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது, சட்ட விரோத அணுசக்தி வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பது, நாடுகளுக்கு இடையே அணுசக்தி தொழில்நுட்பம், சட்ட ஒருங்கிணைப்பு, குற்றப்புலனாய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது' என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அடுத்த அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு 2012-ம் ஆண்டில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக