14 ஏப்ரல், 2010

ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றம் வருவதில் எந்தச் சிக்கலும் கிடையாதென அரசு தெரிவிப்பு




தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றம் வருவதில் எந்தச் சிக்கலும் கிடையாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு வருவதில் எந்தச் சிக்கலும் கிடையாது. இதற்கு முன்னரும் சிறையிலிருந்த உறுப்பினர்கள் பாராளுமன்றம் வந்துள்ளனர். கைவிலங்கு போடப்பட்டிருந்த உறுப்பினர்களும் வந்து சென்றுள்ளனர். ஆனால், சரத் பொன்சேகாவுக்கு கைவிலங்கு போடப்பட்ட நிலைமைகள் எதுவும் கிடையாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக