14 ஏப்ரல், 2010

அணி சாரா இயக்க நாடுகள் கூட்டம்: இந்தியாவுக்கு அழைப்பில்லை





அமெரிக்கா நடத்திய அணி சாரா உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இந்தியா அழைக்கப்படவில்லை.

அணி சாரா இயக்கம் உருவானதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது அமெரிக்காவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள் அமெரிக்காவில் கூடியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், தனது இல்லத்தில் அணிசாரா இயக்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மதிய உணவு விருந்து அளித்தார். அதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்காததால் அக்கூட்டத்தில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

அணிசாரா நாடுகள் இயக்கத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டும் இக்கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. தடை சட்டத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. சிலி, செüதி அரேபியா, அல்ஜீரியா, எகிப்து, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக