14 ஏப்ரல், 2010

புதிய பாதையின். தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்



நாளை விகிர்தி வருடம் பிறக்கின்றது. இன்று விரோதி வருடத்தின் இறுதிநாள். பழையன கழி தலும் புதியன புகுதலும் வழமை நிகழ்வுகள். புதுவருடத்தில் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை யும் மனநிறைவையும் அளிக்கவல்ல புதிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.புதிய வருடத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்கவுள்ளது. நாட்டில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சி னைகளுக்குப் புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்வு கிடைக் கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வேண் டும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கும் பொறு ப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு.

தாமதமின்றித் தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளுள் இனப் பிரச்சினை முதலிடம் வகிக்கின்றது. சிங்கள மக்களின் பிரநிநிதிகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிக ளும் யதார்த்தபூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுவார்க ளேயானால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எவ் வித சிரமமும் இருக்காது. இனப்பிரச்சினையின் தீர்வை நோக்கிச் செயற்பட வேண்டும் என்ற முடிவை எடுப் பதற்குச் சித்திரைப் புதுவருடம் பொருத்தமான சந்தர்ப்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக