14 ஏப்ரல், 2010

திருப்தியான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புதுவருடம் : வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி




தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்ப டும் முதலாவது புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். சிங்கள, தமிழ் மக்கள் சம நிலையில் நின்று கொண்டாடும் புதுவருட கொண் டாட்டங்கள் எமக்கிடையிலான உறவுகளை அங்கீகரிப்பதாக அமைகின்றது.

எமது நாட்டு மக்களிடம் உள்ள பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம்பரியங் களின் தொடர்ச்சியாகவே இதனைக் காண முடிகின்றது. மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது.

விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தை கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம்.

எதிர்கால பரம்பரையான எமது பிள்ளைகளே புதுவருடத்தின் உண்மையான தாற்பரியத்தைப் பெரிதும் உணர்ந்து கொள்ள வேண்டியவர்ளாவர். ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் சிங்கள - தமிழ் புதுவருடம் மகிழ்ச்சி, சமாதானம், பகிர்ந்து கொள்ளல் மற்றும் திருப்தியடைதல் போன்ற உணர்வுகளுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு, எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துக்கள்." இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக