14 ஏப்ரல், 2010

அவுஸ்திரேலியாவின் கொள்கை மாற்றம் அகதிகளின் வருகையை குறைக்கப்போவதில்லை!





இலங்கை ஆப்கான் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு கொண்டுவந்திருக்கும் கொள்கை மாற்றமானது அகதிகளின் வருகையை குறைக்கப் போவதில்லையென்று அவுஸ்திரேலியாவில் வெளியாகும் த மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகள் பலர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு புதிய அகதிகளுக்கு இடநெருக்கடி காணப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் இலங்கை மற்றும் ஆப்கான் நிலவரங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான காலஅவகாசம் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கொள்கை மாற்றம் தற்போது கிறிஸ்துமஸ் தீவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பொருந்தாதென அறிவிக்கப்படுகிறது. புதிய அகதிகள் மீண்டும் படகுகளில் வராதிருக்கும் வகையில் இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த எண்ணம் தோல்வி கண்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ள த மோர்சின் ஹெரால்ட், இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டுமொரு படகு மீட்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக