22 ஏப்ரல், 2010

நித்யானந்தா கைது: நடிகை ரஞ்சிதா அதிர்ச்சி ஐதராபாத்தில் தலைமறைவு






நடிகை ரஞ்சிதாவால் நித்யானந்தா சாமியார் ஜெயிலுக்கு போகிறார். இமாசல பிரதேசத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்து வந்துள்ளனர். கற்பழிப்பு, மோசடி, மிரட்டல், குற்றச்சாட்டு செயல்களுக்கு உடந்தை என பல வழக்குகள் அவரை இறுக்குகின்றன. நித்யானந்தா கைது ரஞ்சிதாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருவரும் படுக்கை அறையில் நெருக்க மாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ, டி.வி.யில் வெளியாகி ஒன்றரை மாதங் கள் ஆகி விட்டன. இதுவரை போலீஸ் அமைதியாக இருந்த தால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றே ரஞ்சிதா கருதினார். சாமியாருக்கு பணி விடை தான் செய்தேன் என்று விளக்கம் அளித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆபாச வீடியோவில் ரஞ்சிதாதான் சாமியாரை பல வந்தம் செய்கிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிலர் அறிக்கை விட்டனர். வக்கீல்கள் சென்னை போலீஸ் கிஷனரிடம் ரஞ்சிதாவை கைது செய்யும்படி மனு அளித்தனர்.

ரஞ்சிதா மீது வழக்குப்பதிவு செய்யப்படா விட்டாலும் அவர் பயந்தார். தியாகராய நகரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு வெளியேறினார்.அமெரிக்காவில் சகோதரி வீடு உள்ளது. அங்கு போய் சில வாரங்கள் தங்கினார். கைது நடவடிக்கை இருக்காது என்று உறுதியாக தெரிந்து கடந்த வாரம் தான் அவர் இந்தியா திரும்பினாராம்.

நித்யானந்தா தொடர் பிலும் பாதுகாப்பிலும் தற்போது ரஞ்சிதா இருக்கிறார் என்று இருவரையும் ஆபாச வீடியோ படம் எடுத்த லெனின் கூறினார்.இந்த நிலையில் தான் போலீசார் அதிரடியாக இறங்கி சாமியாரை கைது செய்துள்ளனர். ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதில் ரஞ்சிதாவுக்கு எதிராக சில ஆவணங்கள் இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

சாமியார் மேல் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அவருக்கு எதிராக ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முயற்சிக்கின்றனர். தன்னை மயக்கியோ அல்லது பயமுறுத்தியோ படுக்கையில் பயன்படுத்திக் கொண்டார் என்று ரஞ்சிதா கூறினால் அது தங்கள் வழக்குக்கு வலுவாக அமையும் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனவே அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. ரகசிய போலீசார் ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கண் காணிக்கின்றனர். போலீஸ் தேடுவதால் ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள தோழி வீட்டில் தங்கி இருந்தாராம். இப்போது அந்த இடத்தை மாற்றி விட்டார். புதிதாக வாங்கி இருந்த செல்போனையும் “சுவிட்ச் ஆப்” செய்து விட்டார்.

இந்த வழக்கில் ரஞ்சிதா முக்கியம் என்பதால் அவரை வெளிகொண்டு வந்து அவரது தரப்பு வாக்கு மூலத்தை பெறுவது உறுதி என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக