6 மார்ச், 2010

நிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு





இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவரான நிருபமா ராவ், அந்நாட்டு வெளிநாட்டமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் கொழும்புக்கு முதல் தடவையாக விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக