6 மார்ச், 2010

சுயேட்சை வேட்பாளரின் வாகனம் மீது புத்தளத்தில் தாக்குதல் வீரகேசரி இணையம்




புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 5இல் போட்டியிடும் வேட்பாளர் பனிக்கர் இப்றாஹிம் சாஜஹான்,பயணம் செய்த வாகனத்தின் மீது தில்லையடியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வாகனத்தைச் சேதப்படுத்தியுள்ளதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் வேட்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று மாலை 4.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாம் வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்த போது,பின் தொடர்ந்து வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரஸ்தாப சுயேட்சை அணி வேட்பாளர் செலுத்திய வாகனத்தில், புத்தளம் மாவட்டத்தில் .தே.முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் படம் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக