6 மார்ச், 2010

பொலிஸ், முப்படைகளுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் பிரசுரிக்க




ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங் கவின் படுகொலை தொடர்பாக இரா ணுவத்தின் முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் இரகசிய பொலிஸாரி னால் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்தியை ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலு கல்ல மறுத்துள்ளார்.

இந்தச் செய்தி உண்மைக்குப் புறம் பானது என்றும் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமாக வுள்ள முப்படையின ருக்கும், பொலி ஸாருக்கும் இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதத்தில் செய்திகளை பிரசுரிப்பதோ, ஒளி/ஒலிபரப்புவதோ கூடாது என்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு விவகாரம் தொடர்பான எந்த செய்தியாயி னும், ஊடக மத்திய நிலையத்தி டமோ அல்லது நிலையத்தின் பணிப்பாளரிடமோ அல்லது முப்படை பொலிஸ் பேச்சாள ர்களிடமோ கேட்டு உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக