6 மார்ச், 2010

நிருபமா ராவ் நாளை பேராதனைக்கு விஜயம்




இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நாளை 7ஆம் திகதி பேராதனை ஆங்கில கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கு இருநாள் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர், முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராவார்.
இந்தியா - இலங்கை இடையே ஆங்கில உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் அவர் அங்கு பங்கு கொள்ளவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எச்.எச்.ஆரியதாச தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிறு காலை 8.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு ஆங்கிலக் கல்வித்துறையில் முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக