19 பிப்ரவரி, 2010

அதிபர் சகோதரர் பசிலும் இலங்கை தேர்தலில் போட்டி



கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், அவரின் நெருங்கிய ஆலோசகருமான, பசில் ராஜபக்ஷே, வரும் ஏப்., 8ம் தேதி நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார். இலங்கையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்பகா மாவட்டத்தில், நேற்று பசில் ராஜபக்ஷே, தன் மனுவை தாக்கல் செய்தார். இவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
இலங்கையில் பொது தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 26ம் தேதி. இந்த பொதுத் தேர்தல் மூலம் 225 உறுப்பினர்கள் பார்லிமென்டிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில், 196 பேர் மட்டுமே ஓட்டுப்பதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 பேர், பிரதிநிதிகள் அமைப்பின் கீழ் உள்ள தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவர்.
இலங்கையின் வடபகுதியில் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க, சென்ற டிசம்பரில் இந்தியா வந்த மூன்று உறுப்பினர்கள் குழுவில், பசில் ராஜபக்ஷே இடம் பெற்றிருந்தார். அதிபரின் செயலர் லலித் வீரதுங்கா மற்றும் பாதுகாப்பு செயலரும், அதிபரின் மற்றொரு சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற இருவர். இக்குழு, போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக, இந்தியாவிடம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.



குழந்தைப் புலிகள் விடுதலை : இலங்கை அரசு அறிவிப்பு



கொழும்பு : "விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த, குழந்தை புலிகள் அனைவரும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த 18 வயதிற்கு குறைவான குழந்தைப் புலிகள் 510 பேர், கடந்த ஆண்டு மே மாதம் அரசிடம் சரண் அடைந்தனர். ராணுவத்துடனான சண்டையில் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, சரணடைந்த அவர்களை, கோர்ட் உத்தரவின் பேரில், ஒரு ஆண்டு காலத்திற்கு மறுவாழ்வு முகாமில் வைக்க உத்தரவிடப்பட்டது. மறுவாழ்வு திட்ட பயிற்சிகள் முடிவடைந்ததும் விடுவிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. சமீபத்தில், 150 குழந்தைப் புலிகள் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 273 குழந்தைப் புலிகள், கொழும்பின் புறநகர்ப் பகுதியான ரத்மாலனாவில் உள்ள முகாமில் தங்களின் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் உட்பட அனைத்து குழந்தைப் புலிகளும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர். சில பெற்றோர்கள், மறுவாழ்வு முகாம்களில் உள்ள தங்களின் குழந்தைகளை ஏற்க மறுக்கின்றனர். அப்படி ஏற்க மறுக்கும் குழந்தைகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அதன் பின், கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



‘ஜே. வி. பி. அலுவலகம் சோதனையிடப்படவில்லை’

பொலிஸ் பேச்சாளர்


ஜே. வி. பி. யின் தலைமை அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது எனப் பொலிஸ் ஊடகப் பேச் சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் பிரஷாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் சோதனைத் தடையொன்றை ஏற்படுத்துமுகமாக பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும் ஆனால், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட அவர்கள் செல்ல வில்லையென்றும் பொலிஸ் பேச் சாளர் ‘தினகரனுக்கு’க் கூறினார்.

எனினும், பெலவத்தையில் உள்ள தமது தலைமை அலுவலகம் நேற்றுக் காலை (19) பொலிஸாரினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜே. வி. பி. யின் பேச்சாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் அனு மதி பெற்றே கட்சித் தலைமையக த்தைச் சோதனையிடுவதாக பொலிஸார் கூறியதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.




29 சுயேச்சைக் குழுக்கள் நேற்றுவரை கட்டுப்பணம்



பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை 29 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு சுயேச்சைக் குழுவும், அம்பாறையில் 4 சுயேச்சைக் குழுக்களும், கொழும்பில் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் வவுனியாவில் மூன்று சுயேச்சைக் குழுக்களும், குரு ணாகலில் 2 குழுக்களும், யாழ்ப்பாணத்தில் இரண்டு குழுக்களும், கம்பஹாவில் 5 குழுக்களும், கண்டியில், கேகாலையில், மாத்தளையில் தலா ஒரு சுயேச்சைக் குழு வீதமாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மட்டு. மாவட்டத்தில் நூறு முகம்மது ஜமால்தீன் என்பவரின் தலைமையில் ஒரு சுயேச்சைக் குழுவும் தம்பிலெவ்வை ஜெளபர் கான் தலைமையில் மற்றுமொரு சுயேச் சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள் ளன. நேற்று நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவத ற்காக நேற்று வரை 4 சுயேச்சைக் குழு க்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.



இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டுகோள்


வடக்கிலும், கிழக்கிலும் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் வாழும் வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு உடனடியாகத் தேர்தல்கள் தலைமையகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் 26 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், மிகக் குறைவான வாக்காளர்களே விண்ணப்பித் துள்ளனர். இதனால், திகதி நீடிப்புச் செய்யப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் பீ. குகநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தமது அலுவலகத்திற்குக் கிடைத்துள்ள; கிடைக்கும் விண்ணப்பங்களையும் ஆணையாளருக்கே அனுப்பிவைப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் தலைமையகம் ஆகிய ஏதாவதொரு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.

கம்பஹா மாவட்டத்தில் பசில் தலைமை வேட்பாளர்

21 பேர் கொண்ட குழு வேட்பு மனுவில் கையெழுத்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பாளர் நியமனப்பத்திரம் நேற்று (19) கைச்சாத் திடப்பட்டது.

முதன்மை வேட்பாளரான முன்னாள் எம்.பியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலை மையிலான வேட்பாளர் குழு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று சுபவேளையில் நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திட்டது.

சர்வமதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நடந்த இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் கலந்து கொண்டார்.

கம்பஹா மாவட்டத்தின் வேட்புமனுவின் 21 வேட்பாளர்கள் அடங்குகின்றனர். இதில் இரண்டாவது தலைமை வேட்பாளராக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா போட்டியிடுகிறார். மேலும் ஜாதிக ஹெலஉறுமயவின் அதுரலிய ரத்னதேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, லசந்த அழகியவன்ன, சரத் குணரட்ன, கலாநிதி மேர்வின் சில்வா, பியசிறி விஜேநாயக்க ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரண குணவர்தன, துலிப் விஜேசேகர, அஞ்சான் உம்மா, உபாலி குணரட்ன, நீல் ரூபசிங்க ஆகியோரும் உள்ளடங்கு கின்றனர். தவிரவும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, சந்தன ஜயகொடி ஆகியோரும் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மனைவி வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சகோதரர் ருவன் ரணதுங்க மற்றும் வசந்த சேனநாயக்க, காமினி விஜேசிங்க, துஷ்யந்த வி. மஹபதுகே ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்



பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக் களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும், ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நுவரெலியா மாவட்ட த்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது.

புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ (நிஹய்ஹ ஷிலீற்ட்ஹ ஜிலீழ்ஹசீன்ய்ஹ) தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக் களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்க ளைத் தாக்கல் செய்யுமென கட்சி வட் டாரங்கள் கூறின.

ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடி வுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


நெடுந்தீவு - குறிகட்டுவான்
குமுதினியில் பயணம் செய்ய 120 பேருக்கு மட்டுமே அனுமதி


நெடுந்தீவு, குறிகட்டுவான் பயணிகள் படகு குமுதினியில் ஒரு தடவை பயணி க்கும் பயணிகளின் தொகை 120 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வியாபாரிகளோ பயணிகளோ தம்முடன் பெரிய அளவில் பொருள்களடங் கிய பொதிகளை படகில் ஏற்றிச்செல்ல முடியாது எனவும் இந்த நடைமுறைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக