19 பிப்ரவரி, 2010

தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...?



இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உத்தியோகபூர்வமற்ற முறையில் வீரகேசரி இணையத்தளத்துக்கு இத்தகவலை வழங்கினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறை மாவட்டத்திலும் நட்சத்திர ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க கேகாலை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக