9 நவம்பர், 2009

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றவென குரோஸியாவிலிருந்து மேலும் ஐந்து இயந்திரங்கள் கொள்வனவு-

வடக்கில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் குரோஸியா நாட்டிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்கள் ஐந்தினைக் கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக 25மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் வழங்கப்படவுள்ளன. வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் அந்தப் பணிகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கிலேயே மேலும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக