9 நவம்பர், 2009

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமிடையிலான பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை-

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமிடையிலான பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இந்த பஸ் சேவைகளை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பீ.ஏ.லிபினிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தசூழல் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்துகள் வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது நாட்டில் தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த பஸ் சேவைகள் யாழ்ப்பாணம்வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக