9 நவம்பர், 2009

இலங்கையில் குழப்பம்: சொல்கிறார் ரணில்

Latest indian and world political news information


சென்னை:""இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது எதுவுமே சரியில்லை; அனைத்தும் குழப்பமாகவே இருக்கிறது,'' என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை கொழும்பில் இருந்து டில்லி செல்லும் வழியில் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:டில்லியில் இந்திய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். கடந்த அக்டோபர் 30ம் தேதி வரை இலங்கை முகாம்களில் இருந்த தமிழர்கள் இரண்டரை லட்சம் பேர் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களில் குடி அமர்த்தப் பட்டுள்ளனர். இது, சர்வதேச அமைப்பு அளித்துள்ள அறிக்கை.

இன்றைய நிலவரப்படி, எனக்கு எந்த தகவலும் தெரியாது. இலங்கையில் தற்போது எதுவுமே சரியில்லை; அனைத்து விஷயங்களும் குழப்பமாகத் தான் இருக்கிறது.இவ்வாறு ரணில் தெரிவித்தார். பத்திரிகை நிருபர்கள் மேற்கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு, எந்த பதிலும் அவர் கூறவில்லை. சென்னையில் இருந்து கிங் பிஷர் விமானம் மூலம் மாலை 6.30 மணிக்கு டில்லி சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக