9 நவம்பர், 2009

மன்னாரில் தொடர் மழை:மீள்குடியேற்றப்படும் மக்கள் அசௌகரியம்




மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் இருந்து மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று கொட்டும் மழையின் மத்தியில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள், வயோதிபர்கள் , கர்ப்பிணிப்பெண்கள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையால் இவர்கள் கொண்டுவந்த பொருட்கள் நனைந்துள்ளன.மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே அங்கிருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2000 இற்கும் பேற்பட்ட மக்கள் இதுவரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக