19 நவம்பர், 2009

சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்!


சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90

தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
சுவிஸ்கிளை

சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளுடன் EPDP செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு!">



ஈழ மக்கள் ஐனநாயககட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு தினத்தன்று சுவிஸ் வாழ் புலம் பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சமகால, மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம் பெயர் உறவுகளின் கருத்துக்களும், ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு:

தோழர் திலக் 079. 393 29 25
தோழர் விந்தன் 076. 508 78 74
தோழர் தாஸ் 076. 461 63 30
தோழர் அன்ரன் 076. 364 60 61
தோழர் மனோ 079. 489 12 49
தோழர் சுரேஸ்கான் 078. 626 23 15
தோழர் றஞ்சன் 079. 815 09 44
\தோழர் மகேந்திரன் 079. 437 84 38
தோழர் கடாபி 078. 737 24 91
தோழர் ஈசன் 076. 227 58 42
தோழர் சாள்ஸ் 078. 876 70 83
தோழர் Nஐhசேப் 076. 291 35 32
தோழர் வெங்கடேஸ் 078. 306 15 47

சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம் - சுவிஸ்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி. ஈ.பி.டி.பி
சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர்


author

சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட சிறுபான்மை தமிழ், முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்றுள்ளது. பிரித்தானிய தமிழ் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மேற்படி சந்திப்பில் கலந்து கொள்வதற்காக.

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ, தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் பொது செயலர் ஸ்ரீதரன், சமூக சேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.க, ம.ம.மு, மே.ம.மு போன்ற கட்சிகளின் தலைவர்கள் ஜரோப்பா பயணமாகியுள்ளனர்.

எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இவ் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதற்கான ஏற்பாட்டினை பிரித்தானிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக