19 நவம்பர், 2009

இலஞ்சம் பெற்ற நீதிமன்றத்தின் பதிவாளர் அதிகாரிகளால் கைது- அம்பாறையில் சம்பவம்


பதிவாளர் ஒருவர் மனுதாரரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சம்பவமொன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பதிவாளர் அலுவலகத்துக்குள் வைத்து குறித்த மனுதாரரிடமிருந்து மூவாயிரம் ரூபா பணத்தொகையினை இலஞ்சமாகப் பெந்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சோமவீர லொகுகே தகவல் தருகையில் கூறியதாவது :

சீட்டுப் பணத்தை வழங்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்து குறித்த சந்தேக நபர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவருடைய சொத்துக்களை ஏலத்தில் விடவும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளியின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்காக அண்மைக்காலத் திகதியொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு மனுதாரரினால் குறித்த பதிவாளருக்கு மூவாயிரம் ரூபா பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இலஞ்சப் பணத்தை மேற்படி பதிவாளர் பெற்றுக்கொள்ளும் தருவாயில் அவ்விடத்துக்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கையும்மெய்யுமாகக் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். உரிய விசாரணைகளை அடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக