30 நவம்பர், 2009

அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் கட்டுப்பணங்களை செலுத்தலாமென தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு விண்ணப்பிக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் கட்டுப்பணங்களை வைப்புச் செய்யலாமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி நண்பகல்வரை கட்டுப்பணங்களைச் செலுத்தலாமென செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 50ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஒருவரோ, பிறிதொருவரோ கட்டுப்பணத்தைச் செலுத்த முடியுமென்பதுடன், அதற்காக கட்சித் தலைமையகத்திடமிருந்து கடிதமொன்று எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதேவேளை சுயேட்சைக்குழு ஒன்று 75ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டியுள்ளதுடன், சுயேட்சைக் குழுவிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்றும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக